Friday, March 19, 2010

vijalashami

இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி சென்னை-28' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். `சரோஜா,' `அதே நேரம் அதே இடம்' ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். `சுல்தான் தி வாரியர்' படத்தில், ரஜினிகாந்துடன் நடித்துள்ளார்.


விஜயலட்சுமி இப்போது, `கற்றது களவு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர், கிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார். கிருஷ்ணாவுக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே காதல் இருந்து வருவதாக பேசப்படுகிறது.

இதுபற்றி விஜயலட்சுமியிடம்,

‘’எனக்கும், கிருஷ்ணாவுக்கும் காதல் என்று பேசப்படுவதில் உண்மை இல்லை. அது வெறும் வதந்திதான். கிருஷ்ணா எனக்கு நல்ல நண்பர். எங்களுக்கு இடையே இருப்பது, நட்புதான்.

எந்த கதாநாயகனுடன் நான் நடித்தாலும், அந்த கதாநாயகனை நான் காதலிப்பதாக கிசுகிசு பரவி விடுகிறது. `கற்றது களவு' படத்தின் முதல்நாள் படப்பிடிப்பின்போதே என்னையும், கிருஷ்ணாவையும் பற்றி கிசுகிசு பரவிவிட்டது.

அப்புறம், இன்டர்நெட்டில் எனக்கும், கிருஷ்ணாவுக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும், இரண்டு பேருக்கும் குழந்தை இருப்பதாகவும் வதந்தியை பரப்பி விட்டார்கள். எனக்கு எதிராக வதந்தியை பரப்புகிறவர்கள் யார் என்று தெரியவில்லை’’என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், தனக்கு மீசை உள்ள ஆண்களைத்தான் எனக்கு பிடிக்கும். மீசை இல்லாத ஆண்களை பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment