Friday, March 19, 2010

kamal

சினிமாவும் சின்னத்திரையும்: கமல் பேச்சு





தியேட்டர் அதிபர் அபிராமி ராமநாதன், இப்போது சின்னத்திரை சீரியல் தயாரிப்பிலும் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார். இதற்காக இவர் தொடங்கியிருக்கும் `டிவி சீரியல் டிவிஷனை' நடிகர் கமல்ஹாசன் தொடங்கிவைத்தார்.

அப்போது அவர்,’’சின்னத்திரை அளவில் வேண்டுமானால் சிறிதாகத் தெரியலாம். ஆனால் அதன் வீச்சு பெரிய வீச்சு. இதை உணர்ந்தவர்களில் நானும் ஒருவன்.

சினிமா-சின்னத்திரை இரண்டையும் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கும் ஊடகமாக நான் பார்க்கவில்லை. ஒன்றின் பலத்தால் இன்னொன்று வாழும். இரண்டும் ஒன்று சேர்ந்து நன்றாக வாழப்போகிறது.

சமீபத்தில் நடந்த சினிமா பன்முக கருத்தரங்கில், இனிவரும் திரைப்படங்களை பாதுகாக்கவும், முறைப்படுத்தவும் காப்புரிமையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். சின்னத்திரையிலும் இந்த காப்புரிமை திட்டத்தை கொண்டு வந்தால் பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்’’என்று பேசினார்.

No comments:

Post a Comment