Monday, April 12, 2010

காலிசை முந்தினார் சச்சின் முதலிடம்


    
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர் ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 59 பந்தில் 89 ரன்கள்  எடுத்தார். இதில் 10 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.

இதன்மூலம் தெண்டுல்கர் அதிக ரன் எடுத்திருந்த ஜேக்காலிசை முந்தினார். அவர் 11 ஆட்டத்தில் விளையாடி 512 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். காலிஸ் 11 ஆட்டத்தில் 501 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.

மேலும் தெண்டுல்கர் ஐ.பி.எல். தொடரில் ஆயிரம் ரன்களை கடந்தார். கில்கிறிஸ்ட், ரெய்னா, ஹைடன், காலிஸ், ரோகித்சர்மா, காம்பீர் ஏற்கனவே ஆயிரம் ரன்னை கடந்து இருந்தனர்.

No comments:

Post a Comment