Saturday, March 27, 2010

அஜீத் நடிக்கும் ‘துப்பறியும் ஆனந்த்’

ரஜினி-கமலுக்கு பிறகு விஜய்-அஜீத் என்ற நிலை வந்ததில் ஆச்சரியமில்லை.   இவ்விருவரின் 50 வது படமும் ஒரே ஆண்டில் ரிலீசாகப்போகிறது என்பதுதான் ஆச்சரியம்.

விஜய் தனது 50வது படமான சுராவில் மும்முறமாக இருக்கிறார். 

அஜீத்தும் தனது ஐம்பதாவது படமான ‘துப்பறியும் ஆனந்த்’படத்திற்கு தயாராகிவிட்டார்.  இப்படத்தை கவுதம் மேனன் இயக்க, தயாநிதி அழகிரி தயாரிக்கிறார்.

ராஜீவ்மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜீத் நடிக்கும் போதிலிருந்தே கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்து படம் பண்ணனும் என்று முடிவெடித்தார்கள்.

சூழ்நிலையால் அந்த முயற்சி தட்டிக்கொண்டே போனது.   இப்போதுதான் கைகூடியிருக்கிறது.  காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களூக்கு முதலில் அஜீத்தைதான் நடிக்க வைக்க யோசித்துள்ளார் கவுதம்.

அந்த முயற்சி கூடாததால் இப்போது துப்பறியும் ஆனந்த்தை அவ்விரு படங்களின் விருவிருப்பும், சஸ்பென்ஸும் போல் அமைத்திருக்கிறார் கவுதம்.

No comments:

Post a Comment