Showing posts with label thala. Show all posts
Showing posts with label thala. Show all posts

Friday, March 26, 2010

No actress in Ajith’s next flim



No actress in Ajith’s next flim :
This would be a stunning surprise for everybody, especially for the Ajith fans. His abrupt decision of giving up the title ‘Ultimate Star’ and involvement in various departments of production works have been transcending his status to greater heights. Now, here’s yet another buzz.

It seems that Ajith Kumar will have no heroine in his upcoming film to be directed by Gowtham Menon. Recently, after witnessing the latest makeover of Ajith, everyone has been mentioning that he’ll play a cop’s role and now no-heroine factor clearly signifies that it’s a taut thriller with shorter duration.

Well, it’s so obvious that Ajith has stepped out of usual traits of performing comedy and romancing ladyloves. Anyways, it’s not going to make any difference for this actor and his fans as well.

Wednesday, March 24, 2010

Ajith in Durai-Dayanidhi-Azhagiri-Engagement




Friday, March 19, 2010

ajith



aijith 50th flim


அஜீத் நடிக்கும் ஐம்பதாவது படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக இருந்தார். வில்லன், வரலாறு படங்களுக்கு பிறகு மீண்டும் வெற்றிக்கூட்டணி அமைக்கும் முடிவில் இருந்தார்கள்.

ஆனால் அவர் அஜீத்துக்கான கதை இன்னும் முழுமை அடையாததால் ஐம்பதாவது படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு கிடைத்திருக்கிறது. பில்லா, ஏகன் படங்களில் நயந்தாரா நடித்திருப்பதால் இந்த படத்தில் த்ரிஷா அல்லது ஸ்ரேயா நடிக்கலாம் என்கிறது வெங்கட்பிரபு வட்டாரம்.

ஏகன் படத்தை அடுத்து வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் கோவா படத்தில் நடித்துவிட்டு இந்த படத்தை துவங்க விருக்கிறார்கள்.

விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் அஜீத்!

ஜூன் -22ல் விஜய்யின் பிறந்தநாள். இந்நாளில் கட்சி தொடங்கும் முடிவில் இருக்கிறார் விஜய். இதற்கு போட்டியாக அஜீத்தும் களமிறங்கியிருக்கிறார். ஆனால் என்ன செய்யப்போகிறார் என்றுதான் தெரியவில்லை.

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜீத்-விஜய், இந்த வரிசைக்குள் யாரும் நுழைந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் இருக்கிறார் அஜீத்.

அதனால்தான் தமிழகம் முழுவதும் உள்ள தனது முப்பதாயிரம் ரசிகர் மன்றங்களின் லிஸ்டை பக்காவாக தயாரிக்க சொல்லியிருக்கிறாராம் அஜீத். இந்த பணியை அஜீத்தின் ஆரம்பகால நண்பரும், தற்போதைய மேனேஜருமான சுரேஷ் சந்திரா செய்து வருகிறார்.

விஜய் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்று செய்திகள் வருகிற இந்த நேரத்தில் தனது ரசிகர் மன்ற விபரங்களை கணக்கெடுத்து அவைகளை ஒழுங்கு படுத்த கட்டளையிட்டிருக்கும் அஜீத், அடுத்து என்ன செய்வார் என்ற ஆவல் எழுந்துள்ளது திரையுலகத்தினர் மத்தியில்.

சென்னையில் இருந்தால் கூட ரசிகர்களை சந்திப்பதில் பெரும் ஆர்வம் காட்டாதவர் அஜீத். அப்படியிருக்க இந்த நேரத்தில் இந்த கணக்கெடுப்பு எதற்கு?

aijth

அஜீத் எழுதிய உருக்கமான கடிதம்



தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜீத்குமாரை, அல்டிமேட் ஸ்டார் (உச்ச நட்சத்திரம்') என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள். அவருடைய பெயருக்கு முன்னால், அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.


இந்த பட்டம் வேண்டாம் என்று அஜீத்குமார், திடீர் முடிவு எடுத்து இருக்கிறார். அவர் இப்போது நடித்து முடித்து இருக்கும் அசல் படத்தின் டைட்டிலில், அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதுதொடர்பாக, அந்த படத்தை தயாரித்துள்ள சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு அஜீத்குமார் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.


இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? என்று அஜீத்குமாரிடம், செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அஜீத்,


சமீபகாலமாக இந்திய சினிமா வேறு ஒரு திசையில் பயணப்பட ஆரம்பித்து இருக்கிறது. இந்த சமயத்தில், சில மரபுரீதியான மாற்றங்களை நான் வரவேற்க ஆசைப்படுகிறேன்.


எனவே, சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நான் நடித்து வெளிவரும் அசல்' திரைப்படத்தில் இருந்து அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டம், பட டைட்டில்களிலோ, இனி வரும் விளம்பரங்களிலோ பயன்படுத்த வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளேன்.


என் போன்ற நடிகர்களையும், ரசிகர்களையும் பொதுமக்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு, இந்த முடிவை நான் எடுத்து இருக்கிறேன்.

என் ரசிகர்கள் கண்ணியமானவர்கள் என்ற கருத்து எப்போதும் பொதுமக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார் அஜீத்.