Showing posts with label vadivelu. Show all posts
Showing posts with label vadivelu. Show all posts

Monday, April 12, 2010

பிரச்னைகளை நசுச்கி தூக்கி எறிவேன் வடிவேலு


பிரச்னைகள் வேட்டிக்குள் நுழைந்த எறும்பு மாதிரி. அதை நசுக்கி தூக்கி எறிவேன் என்று வடிவேலு கூறியுள்ளார்.
கென் மீடியா தயாரித்துள்ள படம் அம்பா சமுத்திரம் அம்பானி. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. பாடல் சிடியை வடிவேல் வெளியிட விவேக் வெளியிட்டார்.
விழாவில் பேசிய வடிவேலு,
நானும், விவேக்கும், கருணாசும் நிறைய படங்களில் கூடி கும்பமியடித்திருக்கிறோம். இப்போது தனித்தனியாக சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறோம். உலகத்தில் நிறைய பிரச்னைகள் இருக்கிறது. மக்கள் எப்போதும் டென்ஷனோடு அலைகிறார்கள். மாலையில் வீட்டுக்குச் சென்றால் குடு:மபத்தோடு பார்த்து சிரிப்பது எங்கள் நகைச்சுவை காட்சிகளைத்தான்.
நகைச்சுவை சேனல்கள் மக்களுக்கு ரிலாக்சை கொடுக்கிறது. எனக்கும் ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அது வேட்டிக்குள் நுழைந்த எறும்பு மாதிரி நசுக்கி தூக்கி எறிய வேண்டியதுதான் என்றார்.

Tuesday, April 6, 2010

ஹீரோவாகிறார் வடிவேல் மகன்

    
    நடிகர் வடிவேலுவுவின் மூத்த மகன் சுப்பிரமணிக்கு 23 வயது ஆகிறது.   பிளஸ்-2' படித்து முடித்த இவர், இப்போது `கம்ப்யூட்டர் மற்றும் அனிமேஷன்' கற்று வருகிறார்.

இவரை நடிக்க வைப்பதற்கு பல டைரக்டர்கள் முயற்சி செய்தார்கள். அதற்கு வடிவேல் முதலில் சம்மதிக்கவில்லை. ``நேரம் வரட்டும்...அப்புறம் பார்க்கலாம்'' என்று வடிவேல் கூறிவந்தார்.
இப்போது அதற்கான நேரம் வந்திருப்பதாக கருதி, வடிவேல் தன் மகன் சுப்பிரமணியை கதாநாயகனாக அறிமுகம் செய்ய முடிவு செய்து இருக்கிறார்.
மகனுக்காக, வடிவேல் பல டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார். நல்ல கதை அமைந்ததும், மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்ய அவர் திட்டமிட்டு இருக்கிறார்.
  
இது குறித்து அவர்,  ‘என் மகன் சுப்பிரமணிக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அவனுக்கு பொருந்துகிற மாதிரி ஒரு கதையை தேடி வருகிறேன். இதுவரை மூன்று டைரக்டர்களிடம் கதை கேட்டு இருக்கிறேன். அதில், ஒரு டைரக்டர் சொன்ன கதை சுப்பிரமணிக்கு பொருந்துகிற மாதிரி இருக்கிறது.
என்னைப்போல் நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல், நடிப்பு, நகைச்சுவை, காதல், அடிதடி ஆகிய எல்லா அம்சங்களும் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் சுப்பிரமணி அறிமுகம் ஆவான்.
அவனை, தமிழக மக்களிடம் நான் ஒப்படைக்கிறேன். என் பிள்ளையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நான் இப்போது, `பிஸி'யாக முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன். அவன் என் பின்னால் ஓடி வந்து, என்னை துரத்தி பிடிக்கட்டும்.
என் `மார்க்கெட்' நன்றாக இருக்கும்போதே சுப்பிரமணியை தமிழக மக்கள் வசம் ஒப்படைப்பதில், பெருமைப்படுகிறேன்’’என்று கூறியுள்ளார்.